குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளருக்கு கொரோனா

தமிழகத்தில் நேற்று புதிதாக 80 ஆயிரத்து 253 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 1359 ஆண்கள், 920 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 279 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, மக்கள் நீதி மய்யத்தின் வேளச்சேரி தொகுதி வேட்பாளர் சந்தோஷ்பாபு, அண்ணாநகர் தொகுதி வேட்பாளர் பொன்ராஜ், சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்