சிகிச்சை முடிந்து மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார்

பொது மருத்துவ பரிசோதனை சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற நிலையில் பரிசோதனை முடிந்து நணபகல் 12.20 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கிளம்பினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மருமகன் சபரீசன், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ,ஜெகத்ரட்சகன் எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, காந்தி உள்ளிட்டோரும் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றனர்.

முன்னதாக கொளத்தூரில் மருத்துவ பரிசோதனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு இருந்தது. அதனால் அதனால் மருத்துவர்களின் அறிவுரைப்படி ரத்த அழுத்தத்தை பரிசோதனை(BP) செய்தோம், ஈசிஜி (ECG)பரிசோதனை செய்தோம் மற்றபடி ஏதும் இல்லை.எந்த பிரச்னையும் இல்லைா, மருத்துவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு புறப்பட சொன்னார்கள்“ என்றார்.