டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி இந்தப் போராட்டத்தை நடத்துகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பச்சை நிற மாஸ்க் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உண்ணாவிரதத்தில் முத்தரசன், கனிமொழி, பாரிவேந்தர், ரவிபச்சமுத்து, வைகோ, திருநாவுக்கரசர், வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.