வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ஆலோசகர்களிடம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அவரது ஆலோசகர் ஒருவர் கூறுகையில், “அவர் கோபத்தில் உணர்ச்சிவயப்பட்டு பேசிவருகிறார். வெள்ளை மாளிகையிலிருந்து அவர் வெளியேறுவார்” என்றார்.இதற்கு வெள்ளை மாளிகை சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. முன்னதாக, டிசம்பர் 15ஆம் தேதி, பைடனை செனட் சபை தலைவர் மிட்ச் மெக்கானல் முதல்முறையாக வெற்றியாளராக அறிவித்தார்.