பிரேசிலில் ஆக்சிஜனுக்காக காத்திருக்கும் மக்கள்

கொரோனாவினால் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட பிரேசிலில், குறிப்பாக வடக்கு பிரேசில் மானவ்ஸில் மருத்துவச் சிகிச்சைக்காகக் காத்திருப்பது விரயம் என்று மக்கள் தங்கள் சொந்தப் பயனுக்கான ஆக்சிஜனுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் நேர்ந்துள்ளது.

கொரோனா நோயாளிகளை மருத்துவனைக்கு அனுப்பாமல் பலரும் வீடுகளிலேயே வைத்து சிகிச்சை பார்த்து வருகின்றனர். இதற்கு ஆக்சிஜன் தேவைப்படுவதால் கடும் வெயிலிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆக்சிஜன் வாங்கிச் செல்கின்றனர்.

பிரேசில் அதிபர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அமேசோனாஸுக்கு பிராணவாயு சப்ளை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை நாளைக்கு அரசாங்கம் ஆக்சிஜன் சப்ளை செய்யும் என்று மக்கள் தங்களுக்கான பிராணவாயு சிலிண்டர்களை தாங்களே நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர்.