காஷ்மீரில் தொகுதி மறுசீரமைப்பு பணிகள் தொடக்கம் !

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக தொகுதி மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சக குழு இன்று தனது பணியை தொடங்கியது.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவரது இல்லத்தில் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மத்திய அரசுத் தரப்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவத ஏதுவாக தொகுதி மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.