டெல்லியை வாட்டி வதைக்கும் வெயில் !

national news : வாரத்தில் இரண்டு நாட்கள் ஊரடங்கு !
national news : வாரத்தில் இரண்டு நாட்கள் ஊரடங்கு !

வெயில் காலம் ஆரம்பமாகிவிட்டது மற்றும் அனல் காற்றும் வீசி வருகிறது.மேலும் தலைநகர் டெல்லியில் வெப்பம் மக்களை வெட்டியெடுத்து வருகிறது.

டெல்லியில் சப்தர்ஜங் பகுதியில் உள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், வெயில் அளவை வெளியிட்டது. அது அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்திருந்தது. அதாவது 76 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாத அதிகபட்ச வெப்பநிலை டெல்லியில் 104 டிகிரி அதாவது 40.1 டிகிரி செல்சியஸ் வெயில் என பதிவாகியுள்ளது.

இந்த அளவு, வழக்கத்தை விட மிக அதிகம் ஆகும்.கடந்த 1945ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி, டெல்லியில் 104.7 டிகிரி வெயில் பதிவானது. அதன்பிறகு கடந்த 76 ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் டெல்லியில் இவ்வளவு அதிகமான வெயில் பதிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.