டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியும் மற்றும் அதன் வழக்கும் !

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து குடியரசு தினமான நேற்று விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணியில் 300 போலீசார் காயமடைந்ததாக கூறப்பட்டுள்ளது. இதில் 2 போலீசார் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் தொடர்பாக டெல்லி போலீசார் 22 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.நேற்று நடந்த வன்முறை குறித்து கருத்து தெரிவித்துள்ள விவசாய சங்கத்தினர், டிராக்டர்கள் பேரணிக்கு ஒதுக்கப்பட்ட வழிகளை படிக்கத் தெரியாமல் மாற்றுப்பாதையில் சென்றதாகவும், அமைதியாக சென்ற பேரணியில் பாஜகவின் பிரமுகர்கள் சிலர் புகுந்ததாகவும் கூறியுள்ளனர் .