5 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது நிவர் புயல்

cyclone-asani-mariners-fishermen-warned-not-to-go-to-sea
கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் முன்னதாகவே பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்த புயலானது சென்னைக்கு கிழக்கே 450 கிமீ தொலைவில் 5 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது இன்று மாலை அதிதீவிர புயலாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் உருவாகியுள்ளதால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் உட்பட பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. புயல் கரை கடக்கும் இடத்தில் 110-120 கிமீ வரை காற்று வீச கூடும் என்றும், இன்றும், நாளையும் கன மழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது