‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ ஊழல் வழக்கின் விசாரணை வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டது

தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா உள்ளிட்டோர் மீதான, ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ ஊழல் வழக்கின் விசாரணை, டில்லி உயர் நீதிமன்றத்தின் வேறு நீதிபதிக்கு மாறுகிறது.

இந்த வழக்கு தற்போது, தினமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பரிந்துரையை அடுத்து, டிச., 1 முதல், வேறு நீதிபதி அல்லது அமர்வு முன், வழக்கின் விசாரணை நடக்க உள்ளது.
இந்நிலையில், ‘ஊழல் தடுப்புச் சட்டம், 2018ல் திருத்தப்பட்டது.

அதில், இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. அதனால், தங்கள் மீதான, மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல’ என, ராஜா உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.