புரேவி புயல் 4-ம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும்

தென்மேற்கு – தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடந்து, பின் டிசம்பர் 4-ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி கடற்கரை பகுதியை நெருங்கும். அதனை தொடர்ந்து கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.