1.7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

லெஹங்கா பாவாடைக்குள் மறைத்து வைத்து கடத்தப்பட இருந்த1.7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை டெல்லி சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பொதுவாக, MDMA போதைப்பொருட்கள் பேரானந்தம் என பொருள்படக்கூடிய எக்ஸ்டஸி (‘ecstasy’) என அழைக்கப்படுகின்றன. உணர்ச்சிகளை மடைமாற்றவும், சக்தியை அதிகரிக்கவும் இந்த போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. MDMA போதைப்பொருளை எடுத்துக்கொள்ளக் கூடியவர்களின் கிட்னி, கல்லீரல் ஆகியவை பாதிக்கப்படும். தொடர்ந்து எடுத்துக்கொள்ளக்கூடியவர்கள் மரணிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

இதேபோல் மற்றொரு சோதனையில், இறக்குமதி செய்யப்பட்ட 6 கோடி ரூபாய் மதிப்பிலான 60 லட்சம் சிகரெட்டுகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.