ஜனவரி 31ஆம் தேதி வரை – ஊரடங்கு நீட்டிப்பு !

கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.தற்போது,உருமாறிய கரோனா பரவி வருவதை ஒட்டி, வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

காணும் பொங்கலுக்கு சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூட அனுமதியில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா தவிர தமிழ்நாட்டிற்குள் வர இ- பாஸ் பதிவு தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி-16இல் காணும் பொங்கலைஒட்டி, மெரினா உட்பட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.