ஜூலை 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!!

இந்தியாவில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு

இங்கிலாந்தில் உருமாறிய புதியவகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஜூலை மாதம் 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் உருமாமாற்றம் அடைந்த புதியவகை கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவியதால், அந்நாட்டில், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு நாடுகள் இங்கிலாந்து உடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்தன.

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா பாதிப்பால், உயிரிழப்பு அதிகமாகும் அபாயம் இருப்பதாக போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.