பள்ளிகளை குறிவைக்கும் கொரோனா தொற்று !

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

கொரோனா தொற்றின் 2 ம் அலை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.ஒரு வருட காலத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டன.மேலும் மேலும் பள்ளிகளை திறக்க அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டது.

தமிழகத்தில் இன்று 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டனஇந்நிலையில்,நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.மேலும் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளியில் 2 பெண் ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த செய்தி பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் 3 அரசுப் பள்ளி மாணவிகளுக்கும், அரியலூரைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.