சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா.செப்டம்பர் 19 அன்று சிஎஸ்கே மற்றும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டியுடன் தொடங்கும் ஐபிஎல் 2021 இன் இரண்டாம் பாதியில் தயாராகி வருகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, சிஎஸ்கேவின் யூடியூப் சேனல் சூப்பர் ஜோடி என்ற நிகழ்ச்சியில் ரெய்னா மற்றும் அவரது மனைவி பிரியங்கா கலந்துகொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற உரையாடலின் போது, ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க இருவரில் யாருக்கு அதிக ஆர்வம் என்று கேட்கப்பட்டது . இதற்கு, ரெய்னா பிக் பாஸின் தென்னிந்திய ஷோ வில் கலந்து கொள்ள எனக்கு கவலை இல்லை.மேலும் அந்த மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த உரையாடலில் அவருக்கு மிகவும் பிடித்த தமிழ் சினிமா நடிகர் சூர்யா என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :என்னது இப்படி ஒரு பரிசா..தனியாக திகில் படங்களை பார்ப்பவருக்கு ரூபாய் 1 லட்சம் பரிசு