இந்தியாவில் 15.55 கோடி மாதிரிகள் பரிசோதனை

இந்தியாவில் கரோனா வைரஸ் பரிசோதனையை பொறுத்தவரையில் 15,55,60,655 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,065 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 99,06,165 ஆக அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் 3-வது முறையாக நாள்தோறும் கரோனாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 94,22,636 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 34,477 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.