ஐஐடியில் மேலும் 79 பேருக்கு கரோனா

சென்னை ஐஐடியில் நேற்று 104 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், மேலும் 79 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி வளாகத்தில் நேற்று 104 பேருக்கு கரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து வளாகத்தில் இருக்கும் நூலகம் வகுப்பறைகள் காலவரையின்றி மூடப்படுவதாக சென்னை ஐஐடி நிர்வாகம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் சென்னை ஐஐடி நிர்வாகம் மாணவர்களுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “விடுதிகளில் தங்கியிருக்கக்கூடிய மாணவர்கள் விடுதிகளிலிருந்து வெளியே வர வேண்டாம். விடுதி அறைகளிலேயே மாணவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.