சுற்றுச்சூழல் அதிகாரி வீட்டில் கோடிக் கணக்கில் நகை, பணம் பறிமுதல்

சென்னையில் உள்ள சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ரொக்கமும் நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டிலிருந்து ரொக்கமாக ஒரு கோடியே 37 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும் 1.22 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.081 கிலோ தங்கம், 1.51 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3343 கிராம் வெள்ளி, 5.40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 10.52 காரட் வைரம், 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 சொத்துகளுக்கான பத்திரங்கள், நிரந்தர வைப்பு நிதியில் 37 லட்ச ரூபாய், ஒரு எடியோஸ் கார், மூன்று இரு சக்கர வாகனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.