கோவையில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் கோவை குற்றாலத்தில் இன்று சித்திரை முதல்நாளை முன்னிட்டு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
தற்போது இருக்கும் கரோனா தொற்று பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக 1,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதனால், பலர் திரும்பிச் சென்றனர்.
இதுதொடர்பாக வனத்துறையினர் கூறியது,கோவை குற்றாலத்தில் இனிமேல் வாரநாட்களில் 750 சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் .மேலும் 5 குழுக்களாக பிரித்து தினமும் உள்ளே அனுப்ப திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.