உ.பி. முதல்வருக்கு கரோனா தொற்று உறுதி !

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில்,சில அறிகுறிகள் எனக்கு இருந்ததையடுத்து நான் கரோனா பரிசோதனை செய்தேன். அதில் நான் கரோனாவில் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. தற்போது நான் தனிமைப்படுத்திக் கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கிய நிலையில் நாளுக்கு நாள் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.உத்தரப் பிரதேசத்திலும் கரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. நேற்று 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.