ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு !

இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவித்தது.

தற்போது கரோனாவால் தனது பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்களுடைய குடும்பத்துக்கு 5 ஆண்டுகளுக்கு அவர் கடைசியாக வாங்கிய ஊதியமும், அவருடைய குழந்தைகளின் படிப்பு செலவும் ஏற்க்கப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் கரோனாவால் பணியாளர் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படும் சூழலில் அவர்களுக்கு சிறப்பு கொரோனா கால விடுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேரடி ஊதியம் பெறா பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மூலம் மொத்தமாக 10 லட்ச ரூபாய் வழங்கப்படும்.