கர்நாடகாவை தாக்கும் கரோனா – ஊரடங்கு அறிவிப்பு !

இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை தீயாய் பரவி வருகிறது.மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கர்நாடகாவில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.மே10ம் தேதி காலை 6 மணி முதல் தொடங்கி 2 வாரத்திற்கு மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காய்கறி மளிகை மதுக்கடைகள் கறிக்கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க அம்மாநில முதல்வர் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.