தமிழகத்தில் சித்தா மையங்கள் விரைவில் அமைக்கப்படும்!

தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.நாளுக்கு நாள் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு நாளை முதல் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.

சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கலைக்கல்லூரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் விதமாக சித்த மருத்துவ மையத்தை சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியது,தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் விதமாக ஒரே வாரத்திற்குள் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும் என மக்கள் நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.