கொரோனா பாதிப்பு 37 மாவட்டங்களில் குறைவு

சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் குணம் அடைபவர்களின் எண்ணிக்கை சதவீதமும் வேகமாக உயர்ந்து வருகிறது. ஆனால் அம்பத்தூர், சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மட்டும் குறைந்த அளவிலேயே கொரோனாவில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை பதிவாகி வருகிறது. இந்த 2 மண்ட லங்களில் 2.4 சதவீதம் அளவுக்கே கொரோனா நோயாளிகள் அதில் இருந்து மீண்டு வருகிறார்கள்.

மற்ற மண்டலங்களில் 8.3 சதவீதம் அளவுக்கு குணம் அடைபவர்களின் எண்ணிக்கை உள்ளது.

சென்னையை போன்று வெளி மாவட்டங்களிலும் கடந்த ஒரு வாரமாக கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

கடந்த 26-ந்தேதி அன்று சென்னையில் 3,561 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று இந்த எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து இருக்கிறது. சென்னையில் நேற்றைய தினசரி பாதிப்பு 2,689 ஆகும்.

சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் (ஈரோட்டை தவிர) கொரோனா வேகமாக குறைந்து வருகிறது. கோவையில் கடந்த 26-ந்தேதி 4,268 ஆக இருந்த தினசரி பாதிப்பு 3,537 ஆக குறைந்து உள்ளது. திருப்பூரில் 1,880 ஆக தினசரி தொற்று 1,096 ஆக சரிந்துள்ளது.

திருச்சியில் கடந்த வாரம் 1,715 ஆக இருந்த பாதிப்பு 1,128 ஆகவும், மதுரையில் 1,538 ஆக தினசரி பாதிப்பு 792 ஆகவும் குறைந்து இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,302 ஆக இருந்த தினசரி தொற்று 1,194 ஆக சரிந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் பல மடங்கு குறைந்து இருக்கிறது. அங்கு கடந்த 26-ந்தேதி 1,198 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் நேற்று 597 பேருக்கே நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.