ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிப்பு – டெல்லி !

கரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவ தொடங்கிய நிலையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அணைத்து மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளன.

இந்நிலையில்,டெல்லியில் நேற்று 25,462 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய் காரணமாக 161 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிப்பு எண்ணிக்கை அதிகமாவதை முன்னிட்டு இன்று இரவு முதல் ஒரு வார கால ஊரடங்கு உத்தரவு விதிக்க அரவிந்த் கெஜ்ரிவால் அரசு முடிவு செய்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோருக்கு கெஜ்ரிவால் கடிதங்களை எழுதி கரோனா கால உதவி கோரியுள்ளார்.