இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை ஏற்படுமா, இல்லையா என்பதை இப்போதைக்கு கணிக்க முடியாது என்றும், இந்தயாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் கொரோனாவால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டனர் என்றும், ‘எய்ம்ஸ்’ இயக்குனர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார்.

சமீபத்தில் நடத்திய ஆய்வில், 50 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் கொரோனாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.