ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் 40 ஆயிரம் கோடி கடன்

ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் 40 ஆயிரம் கோடி கடன் வாங்கியது தான் தி.மு.க., அரசின் சாதனை என பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா மரியாதை செய்த பின்பு நினைவிடம் முன் தேசியக்கொடி ஏற்றினார்.

அவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது கொரோனா காரணமாக கிராமசபை கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. அப்போது அதனையும் மீறி தி.மு.க., பல இடங்களில் கிராமசபை கூட்டம் நடத்தியது.