சென்னைக்கு 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள்

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து தற்போது படிப்படியாக தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது.

முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்ட பின் முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் வரும் 1-ந் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது, இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

இதுவரை 69.85 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.