கரோனா கால கட்டுப்பாடுகள் தீவிரம் – சென்னை !

கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு கரோனா கால தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.சென்னை மாநகராட்சி ஆணையர் கூறுவது,சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் சுமார் 10,200 காவல்துறையினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஞாயிறு ஒருநாள் மட்டுமே ஊரடங்குக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி உடையவர்கள் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கண்டிப்பாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளார்.

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்லுங்கள். விதிமுறைகளை மீறிவோருக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.