பள்ளி மாணவிகளுக்கு கரோனா தொற்று – கும்பகோணம் !

School student tests covid positive
பள்ளி மாணவருக்கு கொரோனா உறுதி

கரோனா தொற்றின் தாக்கம் தமிழகத்தில் அதிகம் வீச தொங்கி உள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை,தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் படிக்கும் 20 மாணவிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சையில் இதுவரை மொத்தம் 5 பள்ளிகளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று கும்பகோணத்தில் 6 மாணவிகள்,1 ஆசிரியைக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.