கரோனா பரிசோதனையை அதிகரிக்க முடிவு – சென்னை !

நாடு முழுவதும் கரோனா தொற்று தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கரோனா பாதிப்பு அதிகம் பரவுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று காலை தெரிவித்திருந்தார்.

மேலும் சென்னையில் கரோனா பரவலைத் தடுக்க ஆர்.சி-பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த, சென்னை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறைக்கு தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.