பெருகும் கொரோனா தொற்று பாதிப்பு!

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி இந்த வருடம் நம் அனைவரையும் கட்டிபோட்டுவிட்டது.இச்சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 2 லட்சத்து 24 ஆயிரத்து 303ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 98 லட்சத்து ஏழாயிரத்து 569ஆக அதிகரித்துள்ளது.

இதனால் குணமடைந்தோரின் விகிதம் 95.92 விழுக்காடாக அதிகரித்துள்ளது. மேலும் கரோனா தொற்றுக்கு இரண்டு லட்சத்து 68 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை மொத்தமாக 16 கோடியே 98 லட்சம் ஓராயிரத்து 749 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.