தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,523 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,523 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் நேற்றைய பாதிப்பு 1538-ஆக இருந்தது. நேற்றை விட தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

நோய் தொற்று பாதிப்பு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து 1,739 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலத்தில் மொத்தமாக 26,13,360 பேர் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.