எல்லையோர மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்

mega sport city
விளையாட்டு வீரர்களுக்காக மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி

கொரோனா பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.

அதில், கேரளா உள்ளிட்ட தமிழக எல்லையோர மாவட்டங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை மட்டும் தொடரலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சுகாதாரத்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நாளை மறுதினம் முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் உள்ள அனைத்து வகுப்பறைகளும் கிருமி நாசினி மூலம் தூய்மை செய்யப்பட்டு வருகின்றன.