சென்னையில் கடந்த 7 நாட்களில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

சென்னையில் கடந்த 7 நாட்களில் 12 மண்டலங்களில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் 0.5 சதவீதம் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்திருந்தது. தற்போது மேலும் 2.5 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 12 மண்டலங்களில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அந்தவகையில் அதிகபட்சமாக திருவொற்றியூர் மண்டலத்தில் 9.6 சதவீதமும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 5.7 சதவீதமும், மாதவரம் மண்டலத்தில் 5.4 சதவீதமும், ஆலந்தூர் மண்டலத்தில் 5.3 சதவீதமும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 4.1 சதவீதமும் அதிகரித்துள்ளது.

அம்பத்தூர் மண்டலத்தில் 3.8 சதவீதமும், அடையாறில் 3.5 சதவீதம், தேனாம்பேட்டையில் 3.1 சதவீதம், கோடம்பாக்கம் 2.7 சதவீதம், அண்ணாநகரில் 1.8 சதவீதமும், மணலியில் 1.3 சதவீதமும், ராயபுரத்தில் 0.6 சதவீதமும் அதிகரித்துள்ளது.

அந்தவகையில் சென்னையில் கொரோனா பாதிப்பு முன்பை விட 2.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல் பெருங்குடியில் 0.5 சதவீதமும், வளசரவாக்கத்தில் 0.9 சதவீதமும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 1.1 சதவீதமும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here