சர்ச்சையில் சிக்கிய மணிப்பூர் மாநில முதல்வர் !

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், போதைப் பொருட்களைப் பயிரிடுவதற்கு எதிராகப் பழங்குடியின மக்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இந்நிலையில் பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகியது.

பிரேன் சிங் நடந்து வருகையில் பள்ளி மாணவர்கள் இருபுறமும் மண்டியிட்டு வழங்கும் காட்சியுள்ளது.இந்தப் புகைப்படத்தைப் பார்த்து ஆத்திரமடைந்த நெட்டிசன்கள் மாணவர்கள் மண்டியிட்டு வணங்குவது முதல்வரின் சர்வாதிகார மனநிலையைக் காட்டுகிறது என விமர்சித்து வருகின்றனர்.

மற்றும் சிலர் இவ்வாறு வரவேற்பளிப்பது மணிப்பூரின் கலாச்சாரம் என்று தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்தப் புகைப்படம் குறித்து, மணிப்பூர் அரசோ, பிரேன் சிங்கோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிபிடத்தக்கது.