தமிழக அரசின் அடுத்த அதிரடி..மதிய உணவு திட்டத்தில் இனி வாழைப்பழம்?

தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டிருக்கும் மதிய உணவு திட்டத்தில் இனி வாழைப்பழம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

திருச்சி மணச்சநல்லூரில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தனியார் பள்ளிகளில் 100 சதவீத பள்ளி கட்டணம் வசூலித்தால் அப்பள்ளியின் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும், வாழைப்பழ விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு நடைமுறைப்படுத்தி வரும் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் அறிக்கை சமர்பிப்பேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.