சரிய தொடங்கிய கொரோனா தொற்று பாதிப்பு !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் வேகமாக பரவ தொடங்கியது.இதனை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில்,கொரோனா தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 46,148 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவில் இதுவரை இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,02,79,331 மற்றும் இதுவரை குணமடைந்தோர்: 2,93,09,607 என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 979 கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 46,148 ,கரோனா தடு்ப்பூசி செலுத்தப்பட்டோர்: 30,79,48,744 என தெரிவித்துள்ளது.