தஞ்சை மாவட்டத்தில் பரவும் கரோனா !

தஞ்சை மாவட்டத்தில் தினம் தினம் கரோனா தொற்று பரவி கொண்டிருக்கிறது.கடந்த வாரம் ஒரே கல்லூரியை சேர்ந்த 20 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது.மேலும்,நேற்று கும்பகோணத்தை சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் தஞ்சையில் பள்ளிகள்,கல்லூரிகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தற்போது தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களை தொடர்ந்து தற்போது கல்லூரி மாணவர்களுக்கும் கரோனா தொற்று இருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.