தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு !

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தென் கிழக்கே வளிமண்டல சுழற்சி நிலவுவதாக குமரி,நெல்லை,தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டமின்றி தெளிவாக காணப்படும்.