இல்லத்தரசிகளுக்கு ரூ.2,000 வழங்கப்படும் – அசாமில் ராகுல் காந்தி பரப்புரை !

ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அசாம் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் தான் நேரடியான மோதல்.

இந்த நிலையில் தேர்தல் பரப்புரைக்காக 2 நாள் சுற்றுப்பயணமாக அசாம் வந்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, திப்ருகாரின் லாகோவால் எனும் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும் திஞோய் தேயிலை எஸ்டேட்டில் தேயிலை தோட்ட பணியாளர்களையும் சந்தித்து பேசினார்.அப்போது பேசிய அவர்,யிலை தொழிலாளர்களுக்கு 365 ரூபாய் சம்பளம் தருவோம், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம், 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தருவோம், 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் மற்றும் குடும்ப தலைவிகளுக்கு 2,000 ரூபாய் தருவோம் என்றார்.