சென்னையில் பயங்கரம்.. கழுத்தை அறுத்துக் கொலை !

சென்னையில் காதலால் நடந்துள்ள விபரீதமான செயல்.தாம்பரம் ரயில்வே குடியிருப்பு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஸ்வேதா என்ற கல்லூரி மாணவி ரயில் நிலையத்தின் உள்ளே செல்லும் போது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.

அருகில் இருந்த போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.இதில் இருவரும் காதலர்கள் என்று தெரியவந்துள்ளது.மேலும் ஸ்வேதா மற்றும் ராமச்சந்திரன் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.இந்த விவகாரம் வீட்டுக்கு தெரிய வர பெற்றோருக்கு மகளின் காதல் தெரியவந்ததால் கண்டித்துள்ளனர். அதனால் பயந்துபோன, சுவேதா, கடந்த நான்கு மாதங்களாக காதலில் இருந்து விலகப் போவதாகவும் பிரேக் அப் செய்யப் போவதாகவும் ராமச்சந்திரனிடம் கூறியுள்ளார்

இதனால் அவன் ஆத்திரம் அடைந்துள்ளான்.கடைசியாக ஒருமுறை வியாழக்கிழமை சந்திக்கலாம் என்று கூறி அழைத்துள்ளார். அதை நம்பிய சுவேதாவும் நேரில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போதுதான் இந்தக் கொடூர சம்பவம் நடந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..நிறைவேறும் வாக்குறுதிகள் !