அதிரடி காட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் !

தமிழக முதல்வர் ஸ்டாலின் கரோனா தொற்று பரவும் இந்த சூழலில் சிறப்பாக செயல்பட்டுவருகிறார்.நேற்று இரவு சென்னை தேனாம்பேட்டையில் செயல்பட்டுவரும் கொரானா தடுப்புக்கான கட்டளை மையத்தில் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு செய்தார்.

ஆக்சிஜன் படுக்கைகள் நிலவரம், சாதாரண படுக்கைகள் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக அரசால் வார் ரூம் எனப்படும் கட்டளை மையம் செயல்பட்டு வருகிறது.

பொதுமக்களின் அழைப்புக்கு ஊழியர்கள் பதிலளிக்கும் பகுதிக்கு வந்த முதல்வர், ஒரு அழைப்பை தானே பெற்று, முதல்வர் ஸ்டாலின் பேசுகிறேன் என்று கூறி குறையைக் கேட்டறிந்தார்.