தங்கம் வெள்பவர்களுக்கு ரூ.3 கோடி பரிசு தொகை- ஸ்டாலின்

கொரோனா காரணமாக கடந்தாண்டு ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் 2020, இந்தாண்டு ஜூலை 23ஆம் தேதி முதல் டோக்கியோவில் நடைபெறவுள்ளது.

ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் திவீரமாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கு பெறவிருக்கும் இந்திய வீரர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

மேலும் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் தமிழர்கள் 6 பேரில் தங்கம் வெள்பவர்களுக்கு ரூ.3 கோடியும், வெள்ளிப்பதக்கம் வெல்வபவர்களுக்கு ரூ.2 கோடியும், வெண்கலப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.1 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.