சினிமா தியேட்டர்கள் திறப்பு – கேரளா !

கொரோனா பரவலை தொடர்ந்து கேரளாவிலும் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. கேரளாவில் வரும் 5ம் தேதி முதல் அனைத்து சினிமா தியேட்டர்களும் திறக்கப்படுகின்றன. 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் இன்று கூறினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளாவில் சினிமா, டிவி படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி சினிமா மற்றும் டிவி படப்பிடிப்புகள் தொடங்கின.

கேரளாவில் வரும் 5ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்கலாம். ஆனால் 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நிபந்தனைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முக கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது உட்பட நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என கூறினார்.