தங்க சுரங்கத்தில் வெடி விபத்து -சீனா !

சீனாவின் வட கிழக்கு மாகாணமாக ஷாண்டோங்வின் கடற்கரை நகரம் யான்டாய். இந்நகரில் தங்கச் சுரங்கம் ஒன்று உள்ளது. கடந்த 10ஆம் தேதி இங்குத் தொழிலாளர்கள் வழக்கம்போல் தங்கள் பணிகளைச் செய்துகொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

அதன் நுழை வாயில் பகுதி இடிந்து விழுந்தது. இதனால் அப்போது சுரங்கத்திலிருந்த 22 தொழிலாளர்கள் வெளிவர முடியாமல் சிக்கிக் கொண்டனர்.‌ இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் சீன அரசு மீட்புப் பணிகளைத் தொடங்கியது.

இங்கு கடந்த 12 நாட்களாக நடைபெற்ற மீட்புப்பணிகள் சுரங்கத்திலிருந்து நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகச் சீனா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.