அமைதியான முறையில் டிராக்டர் பேரணி நடைபெறும்

டெல்லியில் நாளை மறுநாள் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள விவசாயிகள், டெல்லியின் 5 எல்லைப் பகுதிகளில் இருந்தும் டிராக்டர்களில் செல்ல தயாராக உள்ளனர்.

டிராக்டர் பேரணி மிக அமைதியான முறையில் நடைபெறும். எந்த வன்முறைக்கும், தவறுகளுக்கும் இடம் இருக்காது. டிராக்டர்களில் விவசாயிகள் சங்க கொடி மற்றும் தேசிய கொடி கட்டப்பட்டு இருக்கும். வேறு கொடிகளுக்கு அனுமதி இல்லை.

பேரணியில் பங்கேற்போர் விவசாயிகள் வாழ்க, விவசாயிகள் இல்லை என்றால் உணவு இல்லை, 3 சட்டங்களை ரத்து செய், ஆகிய கோ‌ஷங்களை மட்டுமே எழுப்ப வேண்டும். போராட்டத்தில் பெண்களும் பெருமளவு பங்கேற்பார்கள்.