மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு..!

மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் 1.72 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையானது மீனவர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “தமிழ்நாட்டில் கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் நாளன்று தொடங்கி ஜுன் 14ஆம் நாள் வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜுன் 1ம் நாளன்று தொடங்கி ஜுலை 31ஆம் நாள் வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.