சென்னையில் 5,169 பேருக்கு புதிதாக கொரோனா

தமிழகம் முழுவதும் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 2,94,143 ஆக உள்ளது. இன்று மட்டும் 1,76,824 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இன்று தமிழகத்தில் அதிக அளவாக சென்னையில் 5169 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதே போல கோவையில் 3944 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1982 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 81 பேரும், வேலூரில் 31 பேரும், செங்கல்பட்டில் 29 பேரும், திருவள்ளூரில் 27 பேரும், கோவையில் 21 பேரும், தஞ்சையில் 20 பேரும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சென்னை உட்பட 12 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1000ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.